உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

கல்லூரியில் வங்கி பிரிவு அமைக்க கலெக்டருக்கு விஜயகாந்த் கோரிக்கை

விருத்தாசலம் : 

               கொளஞ்சியப்பர் கல்லூரி வளாகத்தில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் விரிவாக்க பிரிவை அமைக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து எம்.எல். ஏ., விஜயகாந்த் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டதாவது:

             விருத்தாசலம் கொளஞ் சியப்பர் கல்லூரியில் ஒன் பது இளங்கலை படிப்புகளும், மூன்று முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி நிலைகளுக்கான பட்ட மேற் படிப்புகளும் உள்ளன. இக்கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி மாணவர் கள் தங்கள் கல்லூரி கட்டணத்தை செலுத்த வங்கிகளுக்கு சென்று காத்திருப்பதால் ஒரு நாள் முழுவதும் வகுப்புக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. மேலும் வங்கிகளுக்கு சென்று கட்டணம் கட்டுவதால் மாணவ- மாணவிகள் அவதிப்படுகின்றனர்.  எனவே கல்லூரி வளாகத்திலேயே அரசுடமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் விரிவாக்க பிரிவை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், கல்லூரியில் மேற்படிப்புகள் துவங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior