உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு திரளாக பங்கேற்க முடிவு

சேத்தியாத்தோப்பு : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பதென செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் சேத்தியாத்தோப்பு எஸ்.கே.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவப் பிரகாசம் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், அவைத் தலைவர் காசி முன்னிலை வகித்தனர்.
 
         சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க. செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், புவனகிரி எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், முன்னாள் துணை செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் கிளி அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில் 13ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும்  ஜெ., தலைமையிலான போராட்டத்தில் புவனகிரி ஒன்றியத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வது, வரும் 24ம் தேதி ஜெ., பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior