உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

மாநில யோகாசன போட்டி சி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை

கடலூர் : 

                மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் சி.கே. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். குடியரசு தினத்தையொட்டி "தமிழ்நாடு யோகாசன சங்கம்' சென்னை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் யோகாசனப் போட்டி நடத்தியது.  ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். அதில் கடலூர் சி.கே. பள்ளியை சேர்ந்த மாணவி மதுமிதா ஐந்து வயது பிரிவிலும், 9 வயது பிரிவில் விக்னேஷ், திவ்யதர்ஷினி முதல் பரிசும், 10 வயது பிரிவில் நவீன் ராஜ், 11 வயது பிரிவில் அஜய், 12 வயது பிரிவில் சத்தீஷ் குமாரும் 2ம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு பயிற்சியளித்த யோகா ஆசிரியர் காளத்தீஸ்வரன் சிறந்த பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு "யோக சக்ரவர்த்தி என்ற பட்டமும் பெற்று, லிம்கா சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகர், முதல்வர் தார்சியஸ், கல் யாணி பிரகாஷ் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior