உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஆர்ப்பாட்டத்தில் ஜெ., பங்கேற்பு மாவட்ட செயலாளர் அழைப்பு

பரங்கிப்பேட்டை : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தை சீர்குலைக்க முதல்வர் கருணாநிதி முயற்சிப்பதாக அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசினார்.
            பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் பு.முட்லூரில் நடந்தது. ஒன்றிய செயலா ளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., செல்விராமஜெயம், முன்னாள் எம். எல்.ஏ., அருள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் பேசுகையில்,ஜெயலலிதாவின் டில்லி பயணத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் திரும்பி பார்க்கின்றனர். கரும்பு விலையை உயர்த்தக்கோரி வரும் 13ம் தேதி ஜெயலலிதா விழுப் புரத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். அந்த ஆர்ப் பாட்டத்திற்கு பரங்கிப் பேட்டை ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்க வேண்டும்.இந்த போராட்டத்தை சீர்குலைக்க கருணாநிதி முயற்சி செய்கிறார். அதனால் நம் தொண்டர்களை காலையிலேயே விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டும். விவசாயிகள், பொதுமக்களையும் பங்கேற்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, விஜயன், மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம்,  ஊராட்சி செயலாளர்கள் ரமேஷ், வேலு, அருள்மணி, மோகன்ராஜ், இளைஞரணி துணை செயலாளர் வீரபாண்டியன், ஜெ., பேரவை நகர செயலாளர் வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior