உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

எனதிரிமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் இரும்பு வேலியில் சட்டையை மாட்டிய போது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் எம்.ஜி. ஆர்., நகரை சேர்ந்தவர் பத்மநாபன்(42). இவரது நிலம் எனதிரிமங்கலம் - கரும்பூர் மெயின் ரோட்டில் உள்ளது. இவரது நிலத்தையொட்டி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமியின் பண்ணை தோட்டம்  உள்ளது. நேற்று காலை பத்மநாபன் தனது நிலத்தில் நெல் நாற்று விடுவதற்கு தனது மகள் ரஞ்சிதா (10) வுடன் சென்றார். நிலத்தையொட்டி உள்ள பண்ணைதோட் டத்தின் இரும்பு முள்வேலியில் தனது சட்டையை கழற்றி மாட்டினார். அப்போது முள்வேலியில் இருந்து   பத்மநாபன் மீது மின்சாரம் தாக்கியது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சிதா சத்தம் போட்டார்.  அருகில் நிலத்தில் வேலை செய்தவர்கள் பத்மநாபனை  மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக் குக் கொண்டு வந்தனர். பத்மநாபனை பரிசோதித்த டாக்டர்  அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
 
                  இதுகுறித்து  புதுப்பேட்டை போலீசார், இரும்பு வேலியில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது என வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  இந்நிலையில் பத்மநாபன் இறப்பிற்கு ஆதிபராசக்தி பண்ணை தோட்டம் முழுவதும் மின் வேலி அமைத்துள்ளதால் அதிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்துள்ளார்  என பத்மநாபனின் அண் ணன் கலியமூர்த்தி புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior