உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

மஞ்சள் நிற குடிநீர் : நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்வதில்லை என புகார்

கடலூர் :

               கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் நிறமாக வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை நேற்று ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பகுதி முழுவதுக்கும் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி நீரேற்று உந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.இத்தொட்டியை பராமரிக்க கான் டராக்ட் விடப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறைதான் சுத்தம் செய்கின்றனர். அதுவும் ஒவ்வொரு முறையும் குடிநீர் மஞ்சள் கலரில் வருகிறது என புகார் அளித்த பிறகுதான் சுத்தம் செய் கின் றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
 
              கடந்த ஒரு மாதமாக மஞ்சக்குப் பம் பகுதியில் தண்ணீர் மஞ்சள் கலரில் வந்துள்ளது. நகராட்சியில் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று குடிநீர் தொட் டியை சுத்தம் செய்தனர். அப்போது தொட்டியில் பாசி படிந்து இரும்பு துகள்களுடன் மஞ்சள் கலரில் தண் ணீரை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
 
                இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதில் சுணக்கம் காட்டினால் காலரா உள்ளிட்ட கொடிய நோய் தாக்க கூடும் என்பதை நகராட்சி நிர்வாகம் அறிந்தும் 3 மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது வேதனையான விஷயம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior