உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

உண்டு உறைவிடப் பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., ஆய்வு

ராமநத்தம் : 

                    தொழுதூர் கஸ்தூரி பாய் காந்தி பாலிகா உண்டு உறைவிடப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்ட சி.இ.ஓ., கதிர்வேலு ஆய்வு செய்தார். ஆய்வில் மாணவிகளுக்கு தையல், இசை, யோகா, ஆங்கிலம், தமிழ், புவியியல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பாடங்கள் குறித்து மாணவிகளிடம் கேள்விகள் கேட்டும், இசை, யோகா உள்ளிட்டவைகளை செய்ய கோரியும் ஆய்வு செய்தார். பின்னர் விடுதியில் வழங்கப்படும் உணவு, உடை குறித்து மாணவிகளிடம் விசாரித்தார். அப்போது ஏ.டி. பி.சி., செல்வம், வட்டார மேற்பார்வையாளர்கள் மங்களூர் முருகேசன், விருத்தாசலம் அந்தோணிசாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மணிகண்டன், சரஸ்வதி, உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior