உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

பிளஸ் 2 தேர்வு துவங்கியது

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 22 மையங்கள் என மொத்தம் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தனித் தேர்வர்கள் 3,936 பேர் 12 மையங்களிலும், பார்வையற்ற மாணவர்கள் 14 பேர் மூன்று மையங்களிலும், உடல் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சொல்வதை எழுதுவது ("ஸ்கிரைப்' ) 11 மையங்களிலும் தேர்வு எழுதினர். தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று தாய் மொழி தமிழ் முதல் தாள் என்பதால் மாணவ, மாணவிகள் "பிட்' மற்றும் காப்பியடித்து பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior