உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

ரேடியோ செட் கட்டுவதில் தகராறு மூவர் காயம்; ஆறு பேருக்கு வலை


கடலூர் : 

                      கோவில் திருவிழாவில் ரேடியோ செட் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூவர் காயமடைந்தனர். ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த எஸ்.புதூர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மாசி மகத்தையொட்டி அம்மன் கோவிலில் மூன்று ஸ்பீக்கருடன் ரேடியோ செட் கட்ட பில்லாளி தொட்டியைச் சேர்ந்த சொக்கலிங்கத்திடம் முன்பணம் கொடுத்திருந்தார்.  ஆனால் சொக்கலிங்கம் ஒரு ஸ்பீக்கருடன் ரேடியோ செட்டை கட்டினார். அதனை மணிகண்டன் தட்டிக் கேட்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தங்கராசு உள்ளிட்டோர் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர்களை தாக்கினர்.அதில் காயமடைந்த மணிகண்டன், முருகன், முத்துக்கிருஷ்ணன் மூவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து தங்கராசு, விஜி, அஞ்சாபுலி, சுந்தர்ராஜன், பிரபு, சந்திரசேகர் ஆகிய 6 பேரை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior