உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

தீயில் சிக்கிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி பலி


திட்டக்குடி : 

                தீயில் கருகிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியை சேர்ந்தவர் சீமான் மனைவி வேம்பாயி (35). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாராமல் அவர் மீது தீ பரவியது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சீமான் தீயை அணைக்க முயன்றார். அதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கடந்த 26ம் தேதி வேம்பாயியும், நேற்று முன்தினம் சீமானும் இறந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுகுறித்து வேம்பாயி தந்தை ராஜாங்கம் கொடுத்த புகாரின் பேரில்  பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior