உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

கடலூரில் கடும் மூடுபனி

கடலூர்:
 
                          கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது.​ ​கோடைகாலம் தொடங்கி விட்டது.​ எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் ​ மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது.​ பகல் நேரத்தில் கடுமையான வெயிலும்,​​ பின் இரவில் பலத்த குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை பனி நீடித்தது.​ காலை 6 மணிக்கெல்லாம் சாலைகளில் 50 அடி தொலைவில் வரும் வாகனங்களைக் கூட பார்க்க முடியவில்லை.​ குளிரும் கடுமையாக இருந்தது. காலை 7-30 மணி வரை சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன.​ 7-30 மணிக்குப் பிறகே சூரியன் தனது முகத்தை மெல்லக் காண்பித்தது.​ அதைத் தொடர்ந்து பனி விலகத் தொடங்கியது

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior