உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

குருகுலம் பள்ளி மாணவர்கள் ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பு


குறிஞ்சிப்பாடி : 

                    வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு  ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் நினைவாக சென்னையில் புதியதாக அமைக்கப் பட்டு வரும் ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூலகத் திற்கு தங்கள் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்கள் அன் ளிப் பாக வழங்க முடிவு செய்து முதல் கட்டமாக ஆயிரம் புத்தகங்களை விலைக்கு வாங்கி அவற்றை மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கணேசமூர்த்தி முன்னிலையில் வள்ளலார் குருகுலம் பள்ளி தாளாளர் டாக்டர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். மேலும் 4 ஆயிரம் புத்தகங்கள் வாங்கவும் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் பள்ளி தாளாளர் செல்வராஜ் கூறுகையில்: 

             பள்ளி மாணவர்கள் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்களும், நிர்வாகத்தின் சார்பில் 5 ஆயிரம் புத்தகங்களும் சேகரித்து  அமைச்சர் பன்னீர்செல்வம் மூலம் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு தங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருக்கிறோம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior