உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?

கடலூர்,:

                      கட​லூர் உப்​ப​னாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.​ 

அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார். 
 
                      கடலூர் உப்பனாற்றில் சிப்காட் தொழிற்சாலைகளின் மோசமான ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதாக,​​ பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் தொழிற்சாலைகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.​ சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை கடலில் கலப்பதாகத் தெரிவித்து வருகின்றன.​ மாசுக்கட்டுப்பாடு வாரியமும் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் உப்பனாற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு உள்படுத்துவதும்,​​ அதன்பிறகு ஓசையின்றிப் போவதும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. குற்றச்சாட்டுகள் மக்களிடம் இருந்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டபோதிலும்,​​ ஆய்வின் முடிவுகளையோ,​​ அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையோ மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளிப்படையாகத் தெரிவித்தது இல்லை.உப்பனாற்றில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்படுவதற்கு ஆதாரமான நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது.​ கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வி.சண்முகம் ​(40).​ கடந்த பிப்ரவரி 26-ம் தேதி காலை 10 மணிக்கு,​​ சிப்காட் தொழிற்சாலைகளுக்குப் பின்புறம் உள்ள உப்பனாற்றில் சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்.வலை உப்பனாறின் உள்ளே சிக்கிக் கொண்டது.​ அதை எடுப்பதற்காக உப்பனாற்று நீரில் கழுத்தளவுக்கு மூழ்கியபோது,​​ தோலில் கடுமையான அரிப்பு ஏற்பட்டது.​ வீடு திரும்பியதும் எரிச்சல் அதிகரித்தது.சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.​ எனவே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து,​​ ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.எனினும் அவருக்கு தொடர்ந்து அரிப்பும்,​​ உடல் நலம் பாதிப்பும் இருப்பதால்,​​ தோல்நோய் நிபுணரிடம் காண்பிக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். இது குறித்து புகார் மனு ஒன்றை சண்முகம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமனிடம் அளித்தார்.​ உடலில் பல இடங்களில் வடுக்கள் இருப்பதையும் ​ காண்பித்தார். கடலூர் உப்பனாற்றில் மீன்பிடிக்கும்போது அடிக்கடி,​​ இத்தகைய ​ நிலை ஏற்படுவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.​ மீனவர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழநிவேல்,​​ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருள்செல்வம்,​​ புகழேந்தி ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior