உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

வைத்தியநாத சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை


திட்டக்குடி : 

                திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக மகா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை மற்றும் 210 சித்தர்களுக்கான சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
 
               கோவில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் நடைபெறவும், உலக அமைதி, மனித நேயம், இயற்கை வளம், மத நல்லிணக்கம் வேண்டி 160 சுமங்கலி மற்றும் இளம் பெண்கள் இணைந்து சிறப்பு குத்துவிளக்கு பூஜை செய்தனர். இதனை மாதாஜி ரோகினி ராஜ்குமார் துவக்கி வைத்தார்.பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி பக்தர்களுக்கு வேள்வி பூஜையுடன், ஆன்மிக உபதேசமும், சித்தர்கள் பூஜையை நடத்தி வைத்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில் யோகா மாஸ்டர்கள் ரஷ்யா ஹலேக், மாஸ்கோ உல்டி கலந்து கொண்டு வைத்தியநாத சுவாமியை வழிபட்டனர். விழாவில் தொழிலதிபர் ராஜன், பேரூராட்சி தலைவர் மன்னன், துணைத்தலைவர் கமலி, திருப்பணிக்குழு கிருஷ் ணன், சிவக்குமார், வேணுகோபால், பாலகிருஷ் ணன், இந்து முன்னணி நகர தலைவர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior