உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மே 10ம் தேதி விழா நடத்த முடிவு



              மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில் பாதையில் முறைப்படி மே 10 ம் தேதி ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்' என, எம்.எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார். விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் தூரமிருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை, 2006ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதே ஆண்டு டிச., 1ம் தேதி இப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை வக்கீல் ராஜேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கு மூலம் கடந்த 23ம் தேதி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், மே மாதம் 10ம் தேதி முறைப்படி இப்பாதையில் போக்குவரத்தை ரயில்வே இணையமைச்சர் அகமது தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.,க்களும், ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை மயிலாடுதுறை எம். எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior