உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

புதுச்சத்திரத்தில் ரூ.27 லட்சத்தில்போலீஸ் நிலையம் கட்டும் பணி

 பரங்கிப்பேட்டை:

                         புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் ரூ. 27 லட்சத்தில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.புதுச்சத்திரத்தை சுற்றி 49 கிராமங்களை உள்ளடக்கி கடந்த 1983ம் ஆண்டு போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது. அன்று முதல் போலீஸ் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சிறிய இடமான அந்த போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை வைத்து விசாரிக்க போதுமான அளவு இடவசதி இல்லை. பெரும்பாலான போலீசார் வெளியூரில் தங்கியுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது குறித்த நேரத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட் டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து தமிழ் நாடு காவல் வீட்டு வசதி கழகம் சார்பில் புதுச்சத்திரத்தில் புதியதாக போலீஸ் நிலையம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சத்திரம் மெயின்ரோட்டில் 26 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior