உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சருக்கு சேர்மன் மனு


திட்டக்குடி:

                பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி சேர்மன் அமுதலட்சுமி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

                     பெண்ணாடம் பேரூராட்சி பழைய பஸ் நிலையம் அருகில் பொது பாதையை கணபதி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுகிறார். ஆத்திரமடைந்த மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் சுவற்றை இடித்தனர். இது குறித்து கணபதி அளித்த புகாரின்படி, பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் 4 பேர் உட்பட 19 பேர் மீது ஜாமீனில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிந்தனர். பின் ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றோம். இந்நிலையில் வருவாய்த்துறை ஆவணங்களை பரிசீலித்த தாசில்தார், பொது சந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமானது என கு.வி.மு.ச. பிரிவு 145 உத்தரவு பிறப்பித்துள்ளார்.

                     அதையும் மீறி கட்டடம் கட்டத் துவங்கிய கணபதி மீது பொதுமக்கள் சார்பாக பிரதிநிதித்துவ முறையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற் றுள்ளனர். ஆனால் பேரூராட்சி வடிகாலை இடித்துவிட்டு கட்டடம் கட்டப்படுகிறது. திட்டக்குடி தாசில்தார் மற்றும் கோர்ட் உத்தரவுகளை மீறி கட்டடம் கட்டி வருகிறார். பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சந்தை ஆக்கிரமிப்பு செய்வதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தி, பேரூராட்சி வடிகாலை இடித்த கணபதி மீது வழக்கு பதிந்து கைது செய்யவும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior