உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் கே.என். நேரு




               ஸ்மார்ட் கார்டு முறை மூலம், வாகன உரிமம், வாகன பதிவுச் சான்று    (ஆர்.சி.) வழங்கும் நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். 

                   இந்த ஸ்மார்ட் கார்டு முறை சோதனை அடிப்படையில் கடலூர், சிவகங்கை மற்றும் சென்னை தெற்கு ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களில் இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் உடனடியாக அமலுக்கு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசும் போது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இது குறித்து மைச்சர் கே.என்.நேரு மேலும் கூறியது:  

              வாகனங்களுக்கான பதிவுச் சான்று (ஆர்.சி.) புத்தக வடிவில் பெரிதாக வழங்கப்பட்டு வந்தது. இதைப் பாதுகாத்து வைப்பதில் சிரமமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, பதிவுச் சான்று, சான்றிதழ் வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சான்றிதழ் வடிவமும் பெரிதாக இருப்பதால், பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் சிறிய அட்டை வடிவில், ஒரு புறம் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமமும், மறுபுறம் வாகனப் பதிவுச் சான்றும் பதிவு செய்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. என்னென்ன இருக்கும்? இந்த அட்டையில் "மைக்ரோ சிப்' ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்தச் "சிப்' தான் வாகன உரிமையாளரின் ஜாதகம் அனைத்தையும் தெரிவிக்கும். அதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகனம் எப்போது வாங்கப்பட்டது, உரிமத்தை புதுப்பிக்கும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளக் கூடிய கையடக்கக் கருவிகளை வாகனத் தணிக்கை அதிகாரிகள் வைத்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior