உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

கடலூரில் மின்சாரம் தடை: குடிநீர் விநியோகம் பாதிப்பு

 கடலூர்:

                     மின்தடை காரணமாக கடலூர் நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடலூர் நகருக்கு கேப்பர் மலை துணை மின்நிலையம்,​​ நத்தப்பட்டு துணை மின்நிலையம் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.​ கேப்பர் மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு கடலூருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.​ கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக என்று கூறி,​​ புதன்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.​ இத்தகைய மின் துண்டிப்பு அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.​ ​
                     
                   இதனால் ஆழ்குழாய்க் கிணறுகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் போய்விட்டது.​ எனவே புதன்கிழமை நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.​ இருக்கிற தண்ணீரை ஆங்காங்கே பிரித்து வழங்கினர்.​ பல இடங்களில் குறைந்த நேரமே தண்ணீர் விநியோகம் இருந்தது.​ இதனால் லாரிகளில் தண்ணீர் விநியோகிப்போரை நகரில் பல இடங்களில் பார்க்க முடிந்தது.​ ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் ​ குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில் கோடைக்கால வறட்சி காரணாக நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் நிலையில் மின்சார விநியோகமும் தடைபடுவதால்,​​ மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior