உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

மங்களூர் ஒன்றியத்தில் சிறந்த மாதிரி தொகுப்பு மையங்கள்- ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


திட்டக்குடி:

                      மங்களூர் ஒன்றியத்தில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாதிரி தொகுப்பு மையங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 107 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் 29 மாதிரி தொகுப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒவ்வொரு மையத்திலிருந்தும் சிறந்த பள்ளி ஒன்றும், சிறந்த ஆசிரியர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு 2010- 11ம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ., சார்பில் பரிசு வழங்கும் விழா, நேற்று முன்தினம் மாலை இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்தது. ஆசிரிய பயிற்றுனர் இளஞ்செழியன் வரவேற்றார்.

                         தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ், ஜெயராமன், முல்லையன், ஜெயபால், திருவள்ளுவன், ராதாபாய், ஆசிரியர் வீரமணி வாழ்த்தி பேசினர். விழாவிற்கு வட்டார வளமைய மேற் பார்வையாளர் முருகேசன் தலைமை தாங்கி, பரிசு வழங்கினார். இதில் சிறந்த பள்ளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சிறந்த ஆசிரியர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆசிரிய பயிற்றுனர்கள் சிவகுரு, மஞ்சு, ஆனந்தராஜ், பால்தாஸ், பன்னீர் செல்வம், சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர் மணிகண்டன் நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior