உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

பா.ஜ.க. ​ மாநிலத் தலைவர் நாளை கடலூர் வருகை

 கடலூர்:

                   பா.ஜ.க.​ மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கடலூர் வருகிறார்.​

​இதுகுறித்து கடலூர் மாவட்ட பா.ஜ.க.​ அமைப்பாளர் க.எழிலரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                     1-5-2010 அன்று சுவாமி சகஜானந்தா நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூருக்கு வருகிறார்.​ அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று,​​ புதன்கிழமை கடலூரில் நடந்த மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​ ​நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ அதைத் தொடர்ந்து இரு சக்கர மோட்டார் வாகனப் பேரணியை அவர் தொடங்கி வைக்கிறார்.​ ​பேரணி கடலூர் முதுநகர்,​​ ஆலப்பாக்கம்,​​ பெரியப்பட்டு,​​ புதுச்சத்திரம்,​​ பு.முட்லூர்,​​ ​ புவனகிரி,​​ கீரப்பாளையம்,​​ சிதம்பரம் வழியாக பகல் 12 மணிக்கு சிதம்பரம் ஓமக்குளத்தைச் சென்றடையும்.​ அங்குள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ குரு பூஜையில் கலந்துகொள்கிறார்.​ பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.​ நிகழ்ச்சியில் கட்சியின் மாநில,​​ மாவட்ட,​​ நகர,​​ ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior