உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

சத்துணவு பணியாளர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு


விருத்தாசலம்:

                      முழுநேர பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்றகோரி தமிழ் நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜய பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:

                   உரிய கல்வித் தகுதியுடன் 1983ம் ஆண்டு பிப்ரவரி முதல் பணியாற்றும் பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து சத்துணவு பணியாளர்களையும் முழுநேர நிரந்தரம் செய்ய வேண்டும். அடிப்படை ஊதிய விகிதம், அகவிலைப்படியுடன் ஓய்வூதியம், அமைப்பாளர் காலி பணியிடங்களில் இளைஞர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கு அரசில் நிரந்தர பணி மற்றும் இதர சலுகைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ள சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் மே 1 ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒன்றிய தலைநகரங்களில் பிரசார இயக்கம் நடத்துவது எனவும், மே 10ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior