உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

கலைஞர் வீட்டுவசதித் திட்டம் 1.63 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு:​ ஆட்சியர் தகவல்

கடலூர்:

              கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை நிறைவுபெற்று இருப்பதாக,​​ மாவட்ட ஆட்சிய பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                 கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசை வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி,​​ 29-3-2010 முதல் நடைபெற்று வருகிறது.​ இதுவரை 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணி நிறைவு பெற்று உள்ளது.​ எஞ்சிய கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.​ ​கணக்கெடுப்பு விவரங்கள் மேலாய்வு அலுவலர்களால் ஆய்வு செய்யும் வேலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.​ கணக்கெடுப்பின்போது தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள்,​​ கால நிலைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் போன்றோர்,​​ கிராம ஊராட்சிகளில் கணக்கெடுப்புப் பணிகள் முடுவதற்குள் வந்து,​​ உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.​ கணக்கெடுப்புக் குழு அதை ஏற்றுக் கொண்டு உரிய விவரங்களை கணக்கெடுப்புப் படிவத்தில் பூர்த்தி செய்வார்கள்.​ மேலாய்வு முடிவடைவதற்கு முன்னதாக உரிய ஆவணங்களுடன் வந்து சமர்ப்பித்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.​ கணக்கெடுப்புக் குழுவினர் தயாரித்த படிவத்தில் தேவையான திருத்தங்களை இடம்பெறச் செய்வார்கள்.​ 

                  கணக்கெடுப்பின்போது ​ கதவு பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் மேலாய்வு முடிவுற்ற பின்,​​ மீண்டும் வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை,​​ வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தனியாக அளித்து விண்ணப்பிக்கலாம்.​ வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து தகுதி குறித்து முடிவு செய்வார்.​ ​ஊராட்சிகளில் கணக்கெடுப்பின்போது ஆவணங்கள் அளிக்காமல் இருந்தாலும்,​​ பூட்டிய வீடு என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால் அந்த நபர்,​​ உரிய ஆணங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 5-5-2010க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior