உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

நில ஆர்ஜிதப் பணிகள் அவசியமானவை


நெய்வேலி:

               நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மின்சாரம் தயாரிக்கின்ற தலையாய பணியைச் செய்து,​​ கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒளி வீசி வருகிறது.​ எனவே மின்சாரத்தை தயாரிக்கவும் அதற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்கவும் நிலம் கையகப்படுத்துவது அவசியமானது என்றார் கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாராமன். கடலூர் மாவட்ட கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உய்யக்கொண்டராவி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.​ இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் 172 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி,​​ பின்னர் அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது:​ இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க என்எல்சியின் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி,​​ கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்,​​ மேலும் சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தீர்வு காணப்படும்.​ கோட்டகம்,​​ உய்யக்கொண்டராவி பகுதியில் மயானக்கொல்லை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து விரைவில் அவை முடித்துத் தரப்படும் என்றார் சீதாராமன்.​ தொடர்ந்து துறைவாரியாக ஒவ்வொரு அலுவலரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.​ என்எல்சி நிறுவனம் சார்பில் நில எடுப்புத்துறை பொதுமேலாளர் என்.எஸ்.ராமலிங்கம்,​​ நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் செய்து தரப்படும் என்றார். விழாவில் கம்மாபும் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வராஜ்,​​ கோட்டகம்,​​ சேப்ளாநத்தம்,​​ பெரியாக்குறிச்சி,​​ நெய்வேலி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,​​ கிராம நிர்வாக அலுவலர்கள்,​​ கிராம மக்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior