உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஆர்.ஐ., விஏஓவை கொல்ல முயற்சி

 பண்ருட்டி:

                   பண்ருட்டி அருகே மணல் கடத்திய லாரிகளைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.பண்ருட்டி அருகே கன்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, இன்று அதிகாலை 3 மணிக்கு வட்டாட்சியர் ஆர்.பாபு, வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த ஒரு லாரியை விஏஓ ஜோதிமணி தடுக்க முயன்றபோது, அவர் மீது ஏற்றுவது போல் வந்த லாரி, வேகமாகத் தப்பிச் சென்றது.பின்னால் வந்த மற்றொரு லாரியை வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன் உள்ளிட்டோர் மடக்கினர்.  அந்த லாரியில் பூபால சந்திரனை ஏற்றி லாரியை காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி  ஓட்டுனரிடம் வட்டாட்சியர் கூறியுள்ளார். லாரி எல்.என்.புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அந்த லாரியை மடக்க முயன்றிருக்கிறது. பின்னர் ரயில்வே கேட் அருகே லாரியை மடக்கிய காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர், லாரியின் ஓட்டுனரைக் கீழே தள்ளிவிட்டு பூபால சந்திரனுடன் லாரியைக் கடத்திச் சென்றிருக்கிறார். கும்பகோணம் சாலையிலுள்ள அரசு மருத்துவமனை அருகே லாரி சென்றபோது, பூபால சந்திரனைக் கீழே தள்ளிவிட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. லாரியில் செல்லும்போது அந்த மர்ம நபர் பூபால சந்திரனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.இதையடுத்து, மர்மநபர் விட்டுச் சென்ற காரைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior