உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு 42 ஊராட்சிகளில் முடிந்தது : கலெக்டர்


கடலூர்  :  

                   கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப் பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior