உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மாற்றுத் திறனாளி சைக்கிள் பயணம்


திட்டக்குடி : 

                    திண்டுக்கல் - சென்னை வரை 200 நாள் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்ட, மாற்றுத் திறனுடைய வாலிபர் திட்டக்குடியில் பிரசாரம் செய்தார். திருநெல்வேலி நாங்குநேரி இட்டாமொழி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் மகன் நெல்சன் (27). மாற்றுத்திறனாளியான இவர் எய்ட்ஸ் நோயின் பாதிப் பினை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரை 200 நாட்கள் மூன்று சக்கர சைக்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர்  21ம் தேதி திண்டுக் கல்லில் பயணத்தை துவக்கினார்.  கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தொழுதூர் வழியாக 175ம் நாளான 11ம் தேதி மாலை திட்டக்குடிக்கு வந்தடைந்தார்.  திட்டக்குடி பஸ் நிலையத்தில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு, அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையம் இயக்கம் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை செல்கிறார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior