உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் மற்றும் திட்டக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

                  விருத்தாசலம் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார் பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழகிரி தலைமை தாங்கினார். பரமசிவம், சவுந்தர்ராஜன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
திட்டக்குடி: 

                  திட்டக்குடியில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் கொளஞ்சி தலைமை தாங்கினார். பொருளாளர் சித்திரவேல், துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வீராசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். பணியில் இறக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior