உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூர் : 

                      சாலை விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி கடலூர் நகர அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     சாலை விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களின் உரிமம் விசாரணையின்றி ரத்து செய்யப்படும் என்ற கலெக்டர் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். சுங்கவரி கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து படிவங்களையும் தமிழில் வழங்க வேண்டும். இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
                     ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையா சிறப்புரையாற்றினார். அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், வள்ளலார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சண்முகம், நடராஜன், கடலூர் முதுநகர் வேன் ஓட்டுனர் சங்கம் சுரேஷ், தமிழ்வாணன், பாட்டாளி தொழிற்சங்கம் ராமமூர்த்தி, சுற்றுலா வேன் ஓட்டுனர் சங்கம் சேகர் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior