உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

கடலூரில் 25-ல் மின் நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்

கடலூர்:

                   கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று,​​ கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ரவிராம் அறிவித்து உள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டுக்கான,​​ விழுப்புரம் மண்டல ​(கடலூர்,​​ விழுப்புரம்,​​ திருவண்ணாமலை மாவட்டங்கள்)​ நுகர்வோர் பாதுகாப்புக் குழுக் கூட்டம்,​​ மண்டலத் தலைமைப் பொறியாளர் தலைமையில்,​​ கடலூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் ​(கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்ச சலை அருகே துணை மின் நிலைய வளாகம்)​ 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது.கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் மின் துறை தொடர்பான குறைகள் இருப்பின் மனுக்களை,​​ கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளருக்கு அனுப்பி வைக்கலாம்.​ 25-ம் தேதி நடைபெறும் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டும் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior