உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடல் செல்போனில் ஒலிக்கும்

                    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது (செல் ஒன்) சந்தாதாரர்களுக்கு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இலவச, விருப்ப கீதமாக (ஃபேவரைட் ட்யூன்) வழங்கும் சேவையை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

                 ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையில், தமிழக முதல்வர் கருணாநிதி இயற்றிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...செம்மொழியாம் தமிழ் மொழி... என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா உள்ளிட்ட 30 பாடகர்கள் பாடியுள்ளனர். இதுவே கோவையில் 23-ம் தேதி தொடங்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பாடலை செல் ஓன் சந்தாதாரர்கள், கட்டணமின்றி, தங்களது செல் போன்களில் இலவசமாக பதிவிறக்கம் (டவுன் லோடு) செய்து கொள்ளும் சிறப்புச் சலுகையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது. இதற்கு, 53733 என்ற எண்ணுக்கு தமிழ் என்று ஆங்கிலத்தில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பினால் போதும் என்று பிஎஸ்என்எஸ் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior