உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் மாதிரி தீவன புல் வளர்ப்பு

நடுவீரப்பட்டு : 

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தீவன புல் வளர்க்கப்படுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் கூறுகையில், "தற்போது கால்நடைகளுக்கு புல் அதிகளவு கிடைக்காமல் கால் நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் எளிதில் வளர்க்க கூடிய குறைந்த நாட்களில் வளரக்கூடிய ரகங்களான கோ 3, கினியா ஆகிய ரக புல்கள் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மாதிரிக்காக வளர்க்கப்படுகிறது. இதை அனைத்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் வளர்த்து பயன் பெறலாம்' என கூறினார்.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior