உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

மரக்கன்றுகள் நடும் விழா

திட்டக்குடி : 

            திட்டக்குடி நகர இளைஞர் காங்., சார்பில் ராகுல் பிறந்த நாளில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

            நகர இளைஞர் காங்., தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் ஷேக்யூசூப் அலி, கர்ணன், முத்து, வார்டு தலைவர் தர்மா சின்னதுரை, ஞானசேகரன் முன்னிலை வகித் தனர். நகர துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாநில சேவாதள அமைப்பாளர் அன்பரசு, மனித உரி மைத் துறை நகர தலைவர் வேல்மணி, மாவட்ட அமைப்பாளர் சங்கர்லால், வக்கீல் பிரிவு நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினர்.

              இதையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரிய வகையைச் சேர்ந்த 40 மரக் கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து கோழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 மாணவர்களுக்கு நோட்டு, பேனா, சிலேட்டுகளை தொகுதி துணைத் தலைவர் தரணிதரன் வழங்கினார்.விழாவில் தலைமை ஆசிரியர்கள் ராஜன், முல் லைநாதன், என்.சி.சி., சண்முகம், ஆசிரியர்கள் மதிவாணன், ராமலிங்கம், வேளாண் ஆசிரியர் வசந்தா, போத்தீஸ் ரமேஷ், அருள் முருகன், வளர்மதி, சுரேஷ், ராஜமாணிக்கம், மலர்க்கொடி, ரகு, மணி, தீபன் ராஜ்குமார், விஜயகுமார் உட்பட பலர் பங் கேற்றனர். முன்னாள் வட்டாரத் தலைவர் குணசேரகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior