உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

என்.எல்.சி.,யில் காலவரையற்ற ஸ்டிரைக் குருதாஸ்குப்தா எம்.பி., எச்சரிக்கை


நெய்வேலி : 

            என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என எம்.பி., குருதாஸ் குப்தா கேட்டுக்கொண்டார். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய உயர்வு, பணி நிரந்தரப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நெய்வேலி டவுன்ஷிப் காமராஜர் சிலை அருகே நேற்று முன்தினம் பொதுக் கூட்டம் நடந்தது. என்.எல்.சி., ஏ.ஐ.டி.யு.சி., பொதுச் செயலர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி. யு.சி., ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைமை நிர்வாகிகள் உக்கிரவேல் மற்றும் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் தியாகராஜன், மாவட்ட செயலர் சேகர், மூர்த்தி, என்.எல்.சி., ஏ.ஐ.டி. யு.சி., தலைவர் தண்டபாணி, பொன்னுசாமி பங்கேற்றனர். 

ஏ.ஐ.டி.யு.சி., அகில இந்திய பொதுச் செயலரும், எம்.பி.,யு மான குருதாஸ்குப்தா பேசியதாவது :

                    என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு டில்லியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நிரந்தரப்படுத்துதல் மற்றும் புதிய ஊதிய உயர்வு குறித்து உடனடியாக என்.எல்.சி., நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சேர்மன் அன்சாரியிடம் பேசினேன். அதன் விளைவாக 750 ரூபாய் ஊதிய உயர்வும், நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் 5000 ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்ப்பது குறித்த முடிவை சுப்ரீம் கோர்ட் டில் நடந்து வரும் வழக்கு முடிவின் அடிப்படையில் மேற்கொள்வதாக தெரிவித்தார். தற்போது நிரந்தர தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதே கால கட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் புதிய ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் முன் வரவேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து வரும் 7ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுவர். 

                       அப்போதும் நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரா விட்டால் அடுத்ததாக இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். இதிலும் முடிவு ஏற்படாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகி விடும். நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் போராட் டத்தில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior