உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

கடலூரில் சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்

கடலூர் : 

             சத்துணவு ஊழியர் சங்க கடலூர் நகர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யசோதா தலைமை தாங்கினார். செயலாளர் புஷ்பலதா வேலை அறிக்கையும், பொருளாளர் சுலோச்சனா நிதி நிலை அறிக்கையையும் சமர்பித்தனர். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். கூட்டத்தில் கிளை தலைவராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவர்களாக கஸ்தூரி, பானு, செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர்களாக சீத்தாலட்சுமி, வச்சலா, பொருளாளராக சுலோச்சனா தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                     சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்விற்கு ஏற்பட சத்துணவு உண்ணும் மாணவர்களின் உணவூட்டு செலவின தொகையை நபர் ஒருவருக்கு 2 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior