உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

கடலூரில் இடியுடன் கூடிய பலத்த மழை மின் மாற்றிகள் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

கடலூர் : 

                 கடலூரில் நேற்று இரவு இடியுடன் பெய்த பலத்த மழை காரணமாக மின் மாற்றிகள் பழுதானதால் நகரம் இருளில் மூழ்கியது. சாலை குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது.

                கடலூரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்து வந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரவு 7.10 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒன்னரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. மின்னல் தாக்கியதில் கடலூர் மின் மாற்றிகள் பழுதாகியது. பில்லாலி தொட்டி பகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதன் காரணமாக இப்பகுதிகளில் முழுவதும் இருளில் மூழ்கியது. மஞ்சக்குப்பம் பகுதியில் மட்டும் அரை மணி நேரத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

                திருப்பாதிரிப்புலியூர் ஆற்றங்கரை பகுதியில் உள்ள மின் மாற்றியில் கடும் சேதம் ஏற்பட்டதால், உதவி பொறியாளர் மற்றும் மின் ஊழியர்கள் மின்சாரம் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவந்திபுரம் சாலையில் மரம் விழுந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 

                    "மின்னல் அதிகளவில் தாக்கியதில் பெரும்பாலான மின் மாற்றிகள் பழுதாகியிருக்கலாம். மாற்று ஏற்பாடுகள் செய்து அனைத்து பகுதிகளிலும் விரைந்து மின் வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

தொழிலாளி காயம்: 

                   நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் காலனியில் தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி சின்னதுரை காயமடைந்தார்.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior