உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

பேட்டி கொடுக்க மட்டுமே கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி சாடல்

கடலூர் : 

                பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சம்பத், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூ., சேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், வக்கீல் பிரிவு செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் சரவணன், மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணகுமார், ஜெயபாலன், மாசிலாமணி, தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாய அணி காசிநாதன், ஒன்றிய செயலாளர் கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில அமைப்புச் செயலாளர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:

                   ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்பது முக்கியமான பிரச்னை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் வழக்கு விசாரணைக்கு வரும் போது, வக்கீலும், நீதிபதியும் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். தீர்ப்பும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இது பாமர மக்களுக்கு தெரியாது.

                என்ன சொன்னாலும் ஜனாதிபதி கேட்பார் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் கருணாநிதி. ஆனால், அவரிடம் தமிழில் வாதாட ஒப்புதல் வாங்க முடியவில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார். மகன், மகளை டில்லிக்கு அழைத்துச் சென்று தலைவர்களுடன் பேசுவதற்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜாவை காப்பாற்ற டில்லி சென்று பேச நேரம் உள்ளது. ஆனால் தமிழில் வாதாட ஒப்புதல் பெற டில்லிக்கு செல்ல நேரமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோர்ட்டுகளில் தமிழில் வாதாட உரிமைகளை பெற்று தருவேன் என கூறியுள்ள ஜெயலலிதாவிற்கு நீங்களும் ஆதரவு தாருங்கள். இவ்வாறு வளர்மதி பேசினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior