உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

கடலூர் மாவட்ட காவலர்கள் கோவை பயணம்

விருத்தாசலம்:

               கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு கடலூர் மாவட்ட  போலீசார்  பாதுகாப்புப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது.​ மாநாட்டு பாதுகாப்புக்காக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.​ இதன்படி கடலூர் மாவட்ட  போலீசார் விருத்தாசலத்தில் இருந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் 14 ஆய்வாளர்கள்,​​ 50 உதவி ஆய்வாளர்கள்,​​ பெண் காவலர்கள்,​​ தலைமைக் காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் உள்பட 520 போலீஸôர் மாநாட்டு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பட்டனர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை காவலர்களுக்கு வழங்கினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior