உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சுமை தூக்கும் பணிக்கு நேர்காணல்


கடலூர் : 

                    நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் சுமை தூக்கும் பணியா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தாலுகாக்களில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக குடோன்களில் தானிய மூட்டைகளை லாரிகளில் ஏற்றி இறக்க தினக்கூலி அடிப்படையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை தடையின்றி அனுப்பிடும் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களில் கூடுதல் சுமை தூக்கும் தொழிலாளர் களை நியமித்திட அரசு உத்தரவிட்டது.

                 அதன்பேரில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடோன்களுக்கும் கூடுதலாக 15 சுமை தூக்கும் தொழிலாளர்கள் என மொத்தம் 105 பேர் நியமிக் கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 850 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களுக்கான நேர் காணல் கடந்த 18ம் தேதி முதல் கடலூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று நடந்த நேர்காணல் மண் டல மேலாளர் ராபின்சன் தலைமையில் நடந்தது. அதில் 300 பேர் பங்கேற்றனர். நேர்காணல் இன்றும் நடக்கிறது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior