உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு இன்று நிறைவு

கடலூர்:

                  கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ நிறைவு அடைகிறது. கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் இளங்கலை வகுப்புகளில் பயில்வதற்கான மொத்த இடங்களில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.​ முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கு மொத்த இடங்கள் 850.​ இவற்றில் சேர 4500 மாணவ மாணவியர் விண்ணப்பித்து இருந்தனர்.ஏற்கெனவே 17,​ 18 தேதிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.​ திங்கள்கிழமை அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இன்று  (செவ்வாய்க்கிழமை)​ கலைப் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.​ பின்னர் காலியிடங்கள் ஏற்பட்டால் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior