உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சிதம்பரம் : 

                  சிதம்பரம் நடராஜர் கோவில் பிரசாத கடை ஏலம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக கேட்கப்பட்டதால் வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் அரசு கட்டுப்பாட்டுக்கு வந்ததையடுத்து பிரசாத கடை வைப்பதற்கான ஏலம் கடந்த ஆண்டு நவ. 26ம் தேதி நடந்தது. கோவிலின் கிழக்கு, மேற்கு வாயிலில் பிரசாத கடை வைக்க 7 லட்சத்து 56 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதற்கான உரிமம் இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

                   அதையொட்டி இந்த ஆண்டு பிரசாத கடை ஏலம் கோவில் நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அறநிலையத் துறை உதவி கமிஷனர் ஜெகன்நாதன் முன்னிலையில் செயல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற் றனர். ஏலம் கேட்பதற்கு மூவர் வந்திருந்தனர். புவனகிரி வடக்குத்திட்டு கோதண்டராமன் 10 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டார். டெண்டர் விண்ணப்பித்தவர்களில் 10 லட்சத்து 35 ஆயிரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அறநிலையத்துறை சார்பில் 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிர்ணயித்த தொகையை விட ஏலம் குறைவாக இருந்ததால் ஏலம் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior