உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு


பண்ருட்டி : 

                பண்ருட்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பாட புத்தகங்கள் குப்பை போல் கிடந்தது தொடர்பாக இணை இயக்குனர் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பண்ருட்டி உதவி தொடக் கக் கல்வி அலுவலக வளாகத்தில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு இலவச பாட புத்தகங்கள் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக மூட்டைகளாக கட்டி குப்பைகள் போல் கிடந் தது. தகவல் அறிந்த தொடக்ககல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) பழனிசாமி, கடலூர் டி.இ.ஓ.,விஜயா, விழுப்புரம் டி.இ.ஓ., தனசேகரன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இணை இயக்குனர் பழனிசாமி ஆய்வுக்கு பின் கூறுகையில், 

               "ஒவ்வொரு ஆண்டும் துவக்கப் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்கள் வட்டார கிடங்கு வாயிலாக அஞ்சல் துறை மூலம் வழங்கப்படுகிறது. இதில் அதிகமாக வந்துள்ள புத்தகங்களை அப்பள்ளியில் இருந்து வட்டார அளவில் பெறப்பட்டு புத்தகங்கள் இல்லாத பள்ளிகளுக்கு அனுப்ப உத்தரவிடப் பட்டது. அதன்படி பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட புத்தகங்கள் பாதுகாப்பாக விநியோகம் செய்யாமல் இருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும் நர்சரி பள்ளிகளுக்கு நிர்வாகிகள் கோரும் சமச்சீர் புத்தகங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். கிடைக்கப் பெறாத பள்ளி நிர்வாகிகள் டி.இ.ஓ.,வை தொடர்பு கொண்டால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் குறைகளை களைய ஒவ்வொரு உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் கல்வித் துறை உயரதிகாரிகள் தொலைபேசி எண்கள் எழுதி வைக்கப்படும். அண்ணாகிராம ஒன்றிய அக்கடவல்லி துவக்கப் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior