உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு எடியூரப்பா ஒரு கோடி நன்கொடை

                       கடலூர் தேவநாதசாமி கோவிலுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான நன்கொடையை, அம்மாநில அதிகாரிகள் தமிழக அமைச்சரிடம் ஒப்படைத்தனர். 

                   கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், தேவநாதசாமி கோவிலின் மலை மீது அமைந்துள்ள ஹயக்கிரீவர் சன்னிதி திருப்பணிகளுக்காக, ஒரு கோடி ரூபாயை தன் சார்பில் வழங்கப் போவதாக, கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இத்தொகைக்கான வரைவோலையை, கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமண்ண நாயக், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் வழங்கினார். அப்போது, துறை செயலர் முத்துசாமி, கமிஷனர் சம்பத் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior