உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

பழைய தலைமை செயலகம் முன்பு மறியல் வேலையில்லா தமிழாசிரியர் சங்கம் முடிவு

திட்டக்குடி: 

              பழைய தலைமை செயலகம் முன்பு நடக்க உள்ள மறியலில் பங்கேற்க வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க செயற்குழு முடிவு செய் துள்ளது. வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெண்ணாடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் சபாநாயகம், செயலாளர் ராயதுரை முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமு விளக்கி பேசினர். 

               கூட்டத்தில் வரும் 19ல் சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி நூலகமான பழைய தலைமை செயலகம் முன் நடைபெறும் மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்பது. செம்மொழி மாநாட்டில் வேலையில்லா தமிழாசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென கூறிய காங்., தமிழக தலைவர் தங்கபாலுவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கணிதம், ஆங்கில பாடத்திற்கு இணையாக தமிழ் பாடத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் நேரடி நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior