உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்

நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதன் முதலில் அறுவை சிகிச்சை முறையில் ஆண் குழந்தை பிறந்தது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்டு 24 மணி நேரம் பிரசவம் பார்க்கும் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. 

                கடந்த 11ம் தேதி காலை 10 மணிக்கு குறவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேவநாதன் மனைவி சாந்தியை (27) பிரசவத்திற்காக நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பரிசோதனையில் சுக பிரசவத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய வட்டார மருத்துவ அலுவலர் ரூபாவதி முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior