உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

மாணவர் குடித்து தற்கொலை முயற்சி : கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மறியல்

குறிஞ்சிப்பாடி : 

             குறிஞ்சிப்பாடியில் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்ததை தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதித்தது. 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையைச்சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் பாலாஜி (20). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி வகுப்பறையில் சில மாணவிகளை கேலி செய்ததாக வந்த புகாரின் பேரில், மாணவர் பாலாஜியை நான்கு நாட்களுக்கு இடை நீக்கம் செய்து, பெற்றோரை அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகம் கூறியது.

                       மனமுடைந்த மாணவர் பாலாஜி நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவர் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகார் குறித்து விசாரிக்காமல் கல்லூரி நிர்வாகம் அதிரடியாக இடைநீக்கம் செய்ததால் மாணவர் பாலாஜி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி சக மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் ஊர்வலமாக வந்து கடலூர் சாலையில் மீனாட்சிபேட்டையில் காலை 11.40 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து தடைபட்டது.
 
                  குறிஞ்சிப்பாடி போலீசார் மாணவர்களை சமாதானம் செய்தனர். அதனையேற்று பகல் 12.10 மணிக்கு மாணவர்கள் மறியலை விலக்கிக் கொண்டனர். தொடர்ந்து கல்லூரியில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததையேற்று மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior