உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

செம்மை நெல் சாகுபடி காலத்தில் இடு பொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கடலூர்: 

            செம்மை நெல் சாகுபடி நேரத்தில் இடு பொருட்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் செம்மண்டலம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட் புக் கூட்டம் நடந்தது. இணை இயக்குநர் இளங்கோவன் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் அண்ணாகிராம பகுதியைச் சேர்ந்த விவசாயி வரதன், 

               'உளுந்து பயிருக்கு காலத்தில் மானியம் வழங்க வேண்டும். காலத்தில் வழங்காததால் விவசாயிகளுக்கு திட்டம் பயனற்று போகிறது. எனவே, மானியத்தை விரை வாக வழங்க வேண்டும்' என தெரிவித்தார்.

மேல்பட்டாம்பாக்கம் விவசாயி சேகர், 

             "செம்மை நெல் சாகுபடிக்கு குறிப்பிட்ட நேரத்தில் இடு பொருட்கள் வழங்காததால் விவசாயம் பாதிக்கும். எனவே, சாகுபடி நேரத்தில் வழங்க வேண் டும்' என்றார்.

திருக்கண்டேஸ்வரம் விவசாயி கோபிநாத், 

              "குறைந்த விதையில் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செம்மை நெல் சாகுபடி முறை அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதற் கான விதை ஏக்கருக்கு 5 கிலோ மட்டும் தேவை எனக் கேட்டால் 50 கிலோ தான் உள்ளது என வழங்குகின்றனர். தேவையான அளவு விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior