உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

விபத்தில்லாத நாள்களே இல்லை: மரணச்சாலையாக மாறும் கிழக்கு கடற்கரைச் சாலை...


கடலூரில் போலீஸ் சோதனையில் விதிகளை மீறியதாக பிடிபட்ட ஆட்டோக்கள்.
 
கடலூர்:

              கிழக்கு கடற்கரைச் சாலை தற்போது மரணச் சாலையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையான கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுவை- கடலூர் இடைப்பட்ட 22 கி.மீ. பகுதியில் (45ஏ) அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் மக்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

                  இது கடலூர் மாவட்ட மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் இறந்தவர்களில் மூவர் சாலையோரம் நின்றிருந்த பாதசாரிகள். புதுவை- கடலூர் இடையே இரு சக்கர வாகனங்களில் செல்வோர், துணிச்சல் மிக்கவராகவும், உயிரைப் பற்றி கவலைப்படாதவராகவும்தான் இருக்க முடியும் என்பது, இப்பகுதி மக்களின் கருத்து. சராசரியாக ஆண்டுக்கு 500 விபத்துகள் கடலூர்- புதுவை இடையே நடக்கின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகிறார்கள். புதுவை பகுதியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பதற்காக 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தினமும் கடலூரில் இருந்து புதுவை மாநில எல்லைக்குள் 5 கி.மீ தூரம் வரைச் சென்று திரும்புகின்றனர். 

             மேலும் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகள், அரவிந்த் கண் மருத்துவமனை, தொழிற்சாலைகள், பள்ளிகள் என்று பலவற்றுக்கும் கடலூர் மற்றும் கடலூரைச் சுற்றியுள்ள மக்கள் தினமும் கடலூர்-புதுவை சாலையில் சென்றுவர வேண்டிய கட்டாயம் உள்ளது. கோயில் விழாவுக்கு நேர்ச்சைக்காகச் செல்பவர்கள்போல், புதுவை மாநில எல்லையில் உள்ள பிராந்திக் கடைகள் சாராயக் கடைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகிறார்கள். இதனால் கடலூர்- புதுவை சாலையில் குறிப்பாக கடலூர்- முள்ளோடை இடையே 6 கி.மீ. தூரம் போக்குரத்து நெரிசல் கடுமையாகி வருகிறது. இப்பகுதியில் விபத்து நடக்காத நாள்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டு, பல அப்பாவி உயிர்கள் பலியாவதால் இது மரணச் சாலையாக மாறிவிட்டது.  

              இந்த 6 கி.மீ. தூரத்துக்குள் சாலை குறுகி இருப்பது, விளக்குகள் இன்றி இருண்டு கிடப்பது, இரு இடங்களில் வளைவுகள், பெரிய கங்கனாங்குப்பம் பகுதியில் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ந்துள்ள ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டும் காணாததுபோல் இருப்பதுதான் கோர விபத்துகளுக்குக் காரணம். மாலை 4 மணிக்கு மேல் அதிவேகத்தில் பறக்கும் ஷேர் ஆட்டோக்கள் பெரும்பாலானவை உரிமம் பெறாதவைகளாகவும், சாராயக் கடைக்கும் பிராந்திக் கடைக்கும் செல்வோரைச் சுமந்து செல்பவைகளாகவும் உள்ளன. ஒவ்வொரு ஷேர் ஆட்டோ மூலமும்  மாமூல் போக, உரிமையாளருக்கு ரூ.300, ஓட்டுநருக்கு ரூ.700-ம் நாள்தோறும் சம்பாதிக்கிறார்கள் என்றால், இவற்றில் பயணிப்போரின் எண்ணிக்கையையும், அவை செல்லும் வேகத்தையும் ஊகித்துக் கொள்ளலாம் என்கிறார்கள் பொதுமக்கள். புதுவை - கடலூர் இடையே இயக்கப்படும் பஸ்களில் குடிகாரர்களின் தொல்லை காரணமாக கடலூரில் இருந்து முள்ளோடை வரை உள்ள பகுதிகளில் பயணிகள் யாரையும் ஏற்றிக் கொள்வது இல்லை. 


இப்பிரச்னை குறித்து கடலூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதாணன் கூறுகையில்

               கடலூர்- புதுவை சாலையில் சுமார் 6 கி.மீ. தூரத்துக்கு உடனடியாக, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ÷கனரக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது, போலீஸôர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை எல்லையில் இருந்து கடலூருக்கு ஆங்கிலேயர் காலத்தில் இருந்த, மாற்றுப் பாதையை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றார்.

                ""பெண்ணையாற்றுப் பாலம் அருகே இரு தணிக்கைச் சாவடிகள் உள்ளன. இப்பகுதியில் நெருக்கடியைப் போக்க, சதுக்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை ஏற்றுக் கொண்டும், நகராட்சியும் மாநில நெடுஞ்சாலைத் துறையும் நிலம் அளிக்காததால், அப்பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பெண்ணையாற்றுப் பாலம் முதல் பாகூர் சாலை பிரிவு வரை, சாலை நடுவே டிவைடர் அமைக்க வேண்டும் என்ற தேசிய நெடுஞ்சாலையின் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இவைகளை நிறைவேற்ற வேண்டும்'' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior