உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்ததால் கிலோவிற்கு ரூ.10 உயர்வு

பண்ருட்டி:

             பண்ருட்டி பகுதியில் முந்திரி உற்பத்தி குறைந்ததால் தற்போது முந்திரி பயிர் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் விலை உயர்ந் துள்ளது.

             பண்ருட்டி பகுதியில் 20 ஆயிரம் எக்டர் நிலப் பகுதியில் பயிரிடப்பட் டுள்ள முந்திரி மரங்களில் இந்த ஆண்டு பருவ மாற்றத்தின் காரணமாக முந்திரி உற்பத்தி கடுமையாக குறைந்தது. அதனால் தற்போது 80 கிலோ எடை கொண்ட முந்திரி கொட்டை மூட்டை 4,100 ரூபாயில் இருந்து 4,300 ஆகவும், ஆப்பிரிக்கா ஐவேரி ரக இறக்குமதி கொட்டைகள் 3,300ல் இருந்து 3,700ஆக உயர்ந்துள்ளது.

            அதுபோல் முந்திரி பயிர் ரகங்களும் ஒரு கிலோவிற்கு சராசரியாக 10 ரூபாய் விலை கூடியுள்ளது. 240 ரகம் 330 ரூபாயில் இருந்து 340ம், 320 ரகம் 300லிருந்து 315ம், ஜே.எச் ரகம் 260லிருந்து 270ம், எஸ் ரகம் 255லிருந்து 260ம், பட்ஸ் ரகம் 220லிருந்து 230ம், கே ரகம் 218ம், எல்.டபில் யூபி 220 ஆகவும், எஸ்.டபிள்யூபி ரகம் 190ம், ஆவரஜ் பயிர் 240 ஆகவும் உயர்ந் துள்ளது. தற்போது இந்தோனியா இறக்குமதி கொட்டைகள் வெகுவாக உயர்ந்துள்ளதால் உள் ளுர் முந்திரி கொட்டைகளும் 5,000ரூபாய்க்கு மேல் உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior