உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

முதல் பட்டதாரிக்கு கட்டண சலுகை பெறுவதில் கூடுதல் சான்றிதழ்

கடலூர்:

          குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு கல்விக் கட்டண சலுகை பெறுவதில் கூடுதல் சான்றிதழ் கேட்டு விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டுள்ளன.

             தமிழகத்தில் முதல் பட்டதாரிக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி பட்டப்படிப்பு முதல் பொறியியல் படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. இச்சலுகை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. கல்விக் கட்டண சலுகை பெற குடும்பங்களில் தந்தை, தாய், சகோதரர், சகோதரி யாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. அவ்வாறு இதுவரை குடும்பத்தில் யாரும் பட்டம் பெறவில்லை என்கிற சான்றிதழை அந்தந்த தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று பிற்பட்டோர் நலத்துறை மூலம் விண்ணப்பங்கள் அனுப்பினால்தான் இச்சலுகைகளை பெற முடியும். அவ்வாறு அனுப்பப்பட்ட பெரும்பாலான விண்ணப் பங்கள் திரும்ப பெறப்பட் டுள்ளன.

              விண்ணப்பங்களில் குடும்பத்தினர் அல்லாமல் தாத்தா, பாட்டியும் படித்து பட்டம் பெற்றிருக்க கூடாது என்ற சான்றிதழும் இணைக்க வேண்டும் என அரசு திடீரென அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே விண்ணப் பித்திருந்த மாணவ, மாணவியர்கள் மீண்டும் சான்றிதழ் பெற தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior